சம்பந்தன் தனது பதவியை துறந்து ஒருநாள் பதவியை எனக்கு தந்து பார்க்கட்டும் அவரது பதவியிலிருந்து எவ்வாறானவற்றை சாதிக்கலாம் என காட்டுகிறேன் என ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் 2004 ஆம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சரத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது.
அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர். அரசாங்கத்தை தாம்தான் காப்பாற்றுவதாகவும், தம்மால்தான் அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் வெறுமனே கூறிக்கொள்ளும் சம்பந்தன் நாளைதான் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேசப்போகின்றாராம். அப்படியானால் இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்.
உங்களால் முடியாவிட்டால் நீங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள்.. அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன். என அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM