இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்தீக் பாண்டிய நேற்று இடம்பெற்ற போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் சுருண்டு விழ, ஸ்ட்ரெட்சரில் மூலம் மைதானத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.
14 ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி 18 ஆவது ஓவருக்காக பாண்டிய பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள பாபர் அசாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். இதன்போது பாண்டிய 17.5 ஆவது பந்தை போட்டு முடிக்க முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தில் சுருண்டு வீழ்ந்தார்.
இதையடுத்து அவருக்கு முதல் உதவிகள் வழங்கப்பட்டு மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெட்சரில் மூலம் அவர் வெளியே கொண்டு செல்லப்பட்டார். பாண்டியாவுக்கு என்ன நடந்தது என்று மைதானத்தில் உள்ளவர்களும் அணியினரும் குழப்பமடைய 17 ஓவரின் இறுதிப் பந்தினை அம்பத்தி ராயுடு போட்டு முடித்தார்.
எனினும் போட்டியின் முடிந்தவுடன் பாண்டிய வழங்கப்பட்ட முதலுதவிகள் மூலம் எழுந்து நடத்துள்ளார். இந் நிலையில் அவரது காயம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒரு அறிக்கையை வெளியிட்டள்ளது. அதில், அவரது உண்டான வலி தற்போது குறைவடைந்துள்ளது. எனினும் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்குறிய மருத்துவ சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே உத்தியோகபூர்வமான தகவலை வெளியிட முடியும் என்றது.
இந் நிலையில ஆசியக் கிண்ணத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இந்திய அணிக்கா பாண்டியா தனது பங்ளிப்பை வழங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM