இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புகள் தொடர்பில் அரசுபொறுப்புக் கூற வேண்டும் -ஐ.நா  

Published By: R. Kalaichelvan

20 Sep, 2018 | 10:45 AM
image

(நியூயோர்க்கிலிருந்து எம்.பி.எம்.பைறூஸ்)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ரெஹாம் அல் பர்ரா புலமைப் பரிசில்  ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை  ஐ.நா. மனித உரிமை பேரவை கைவிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பில் ஐ.நா. வின் நிலைப்பாடு என்ன என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது. 

சிறிசேன அரசாங்கம் இது தொடர்பான விடயத்தில் ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் என நம்புகிறோம். 

இவ் விடயமாக நாம் தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறோம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகிறது. 

இதன் முதல் நாளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04