இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ்ஸின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

19 Sep, 2018 | 12:41 PM
image

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர் மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் ,சாரதி மற்றும் பஸ்ஸின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பஸ் நடத்துனர்  28 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில்  தனியார் பஸ்ஸின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியபோது எதிர்வரும் (01.10.2018) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தனியார் பஸ்ஸின் உரிமையாளரையும் கைதுசெய்ய வேண்டுமென தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா, முல்லைத்தீவு , களுவாஞ்சிக்குடி மாவட்ட இ.போ.ச பஸ்கள் நேற்று முன்தினம்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று  அதிகாலை தனியார் பஸ்ஸின் உரிமையாளர் சரணடைந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் அவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

தனியார் பஸ்ஸின் உரிமையாளரை நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 02.10.2018 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பஸ்ஸின் வெளிமாகாண சேவைகள் நேற்று  மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றையதினம் வெளிமாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18