கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அகற்ற முயன்றதால் அங்கு சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சாந்த புரம் பகுதியில் கடந்த காலங்களில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் விவசாயத்தினை மேற்கொண்ட பின்னர் கைவிட்ட நிலத்தில் பொதுமக்கள் தற்காலிக கொட்டகைகளை அமைத்து வாழ்கின்றனர்.
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த காணியற்ற வறிய மக்கள் குறித்த காணியில் கொட்டில்களை அமைத்து குடியிருக்க முற்பட்ட போது. இன்றைய தினம் மீண்டும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்துவர்கள் அக்காணிகளை பிடிக்க முற்பட்ட போது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களின் குடிசைகளை பலவந்தமாக அகற்றியுள்ளனர் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்ப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM