கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு கண்­வில்­லை­களை புதுப்­பிப்­பதன் மூலம் சிகிச்சை

Published By: Raam

11 Mar, 2016 | 09:23 AM
image

கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்டு செயற்கை கண் வில்­லைகள் பொருத்­தப்­பட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­வர்­க­ளுக்கு, அவர்­க­ளது சொந்த கண்­வில்­லை­களை மீளப் பயன்­ப­டுத்த வழி­வகை செய்யும் புரட்­சி­கர சிகிச்சைத் தொழில்­நுட்பம் சீன விஞ்­ஞா­னி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

குருட்­டுத்­தன்­மைக்­கான அனைத்து கார­ணி­ க­ளுடன் ஒப்­பி­டு­கையில் கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்டு பார்­வையை இழப்­ப­வர்கள் தொகை அரைப் பங்­காக உள்­ளது.

இந்­நி­லையில் கண்­புரை நோய்க்­கான வழ­மை­யான சிகிச்­சை­களின் போது அல்ட்­ரா­சவுண்ட் தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட கண்­வில்­லைகள் மென்­மை­யாக்­கப்­பட்டு அகற்­ற­பட்ட பின் னர் செயற்கை வில்­லைகள் பொருத்­தப்­ப­டு­கின்­றன.

கண்­ணுக்குள் பின்­பு­ற­மாக பொருத்­தப்­படும் இந்த செயற்கை வில்­லை­களால் குறிப்­பாக சிறு­வர்­க­ளுக்கு பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முக­மாக சீன சண் யட் ஸென் பல்­க­லைக்­க­ழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழகத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகளுடன் இணைந்து மேற்­படி புரட்­சி­கர சிகிச்சை முறை­மையை கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்த சிகிச்சை முறை­மையின் பிர­காரம் கண்ணில் ஏற்­ப­டுத்­தப்­படும் சிறிய கீறல் மூலம் கண்­வில்­லையை மூடி­யுள்ள புரை அகற்­றப்­ப­டு­கி­றது. இதன்­போது அந்த வில்­லையின் மேற்­ப­ரப்­பி­லுள்ள அதில் ஏற்­படும் சேதங்­களை சுய­மாக சீர்­செய்யும் மூல­வு­யிர்க்­க­லங்கள் நீக்­கப்­ப­டாது விடப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் புரை அகற்­றப்­பட்ட அந்தக் கண்­வில்லை மீளவும் செயற்­றிறன் மிக்க கண்­வில்­லை­யாக மாறு­வது சாத்­தி­ய­மா­கி­றது.

இது தொடர்­பான பரி­சோ­த­னைகள் முயல்­க­ளிலும் குரங்­கு­க­ளிலும் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ள­பட்­ட­தை­ய­டுத்து தற்­ போது இந்த சிகிச்சை முறைமை 12 சிறு­வர்­களில் பரீட்­சார்த்­த­மாக பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சிகிச்­சையின் போது புது­பிக்­கப்­பட்ட கண்­வில்­லைகள் 8 மாதங்­களில் வழ­மை­யான அள­வையும் செயற்­றி­ற­னையும் அடைந்­த­தாக விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

வயோ­தி­ப­மா­த­லுடன் தொடர்­பு­பட்ட கண்­புரை நோயால் சுமார் 20 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மேற்­படி பாதிப்­புடன் சில சிறு­வர்­களும் பிறந்­துள்­ளனர்.

அதே­ச­மயம் ஜப்­பா­னிய ஒஸாகா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள், ஆய்­வு­கூ­டத்தில் மூல­வு­யிர்க்­க­லங்­க­ளி­லி­ருந்து புதி­தாக கண்­வில்­லையை விருத்தி செய்­வதில் வெற்றி பெற்­றுள்­ளனர்.

அவர்கள் மூல­வு­யிர்க்­க­லங்­களைப் பயன் படுத்தி கண்வில்லைகளை மட்டுமல்லாது விழிவெண்படலம், விழித்திரை, கண்ணின் உட்பகுதி என்பவற்றையும் வெற்றிகரமாக விருத்தி செய்துள்ளனர்.

முயல்களில் பரிசோதிக்கப்பட்ட இந்த பிந்திய சிகிச்சை முறைமை எதிர்காலத்தில் மனிதர்களில் பிரயோகிக்கப்பட்டு பரிசோ திக்கப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26