கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கண் வில்லைகள் பொருத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு, அவர்களது சொந்த கண்வில்லைகளை மீளப் பயன்படுத்த வழிவகை செய்யும் புரட்சிகர சிகிச்சைத் தொழில்நுட்பம் சீன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருட்டுத்தன்மைக்கான அனைத்து காரணி களுடன் ஒப்பிடுகையில் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு பார்வையை இழப்பவர்கள் தொகை அரைப் பங்காக உள்ளது.
இந்நிலையில் கண்புரை நோய்க்கான வழமையான சிகிச்சைகளின் போது அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட கண்வில்லைகள் மென்மையாக்கப்பட்டு அகற்றபட்ட பின் னர் செயற்கை வில்லைகள் பொருத்தப்படுகின்றன.
கண்ணுக்குள் பின்புறமாக பொருத்தப்படும் இந்த செயற்கை வில்லைகளால் குறிப்பாக சிறுவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது வழமையாகவுள்ளது.
இந்நிலையில் மேற்படி பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக சீன சண் யட் ஸென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்படி புரட்சிகர சிகிச்சை முறைமையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிகிச்சை முறைமையின் பிரகாரம் கண்ணில் ஏற்படுத்தப்படும் சிறிய கீறல் மூலம் கண்வில்லையை மூடியுள்ள புரை அகற்றப்படுகிறது. இதன்போது அந்த வில்லையின் மேற்பரப்பிலுள்ள அதில் ஏற்படும் சேதங்களை சுயமாக சீர்செய்யும் மூலவுயிர்க்கலங்கள் நீக்கப்படாது விடப்படுகின்றன. இதன் மூலம் புரை அகற்றப்பட்ட அந்தக் கண்வில்லை மீளவும் செயற்றிறன் மிக்க கண்வில்லையாக மாறுவது சாத்தியமாகிறது.
இது தொடர்பான பரிசோதனைகள் முயல்களிலும் குரங்குகளிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளபட்டதையடுத்து தற் போது இந்த சிகிச்சை முறைமை 12 சிறுவர்களில் பரீட்சார்த்தமாக பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையின் போது புதுபிக்கப்பட்ட கண்வில்லைகள் 8 மாதங்களில் வழமையான அளவையும் செயற்றிறனையும் அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வயோதிபமாதலுடன் தொடர்புபட்ட கண்புரை நோயால் சுமார் 20 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி பாதிப்புடன் சில சிறுவர்களும் பிறந்துள்ளனர்.
அதேசமயம் ஜப்பானிய ஒஸாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆய்வுகூடத்தில் மூலவுயிர்க்கலங்களிலிருந்து புதிதாக கண்வில்லையை விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்கள் மூலவுயிர்க்கலங்களைப் பயன் படுத்தி கண்வில்லைகளை மட்டுமல்லாது விழிவெண்படலம், விழித்திரை, கண்ணின் உட்பகுதி என்பவற்றையும் வெற்றிகரமாக விருத்தி செய்துள்ளனர்.
முயல்களில் பரிசோதிக்கப்பட்ட இந்த பிந்திய சிகிச்சை முறைமை எதிர்காலத்தில் மனிதர்களில் பிரயோகிக்கப்பட்டு பரிசோ திக்கப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM