கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்தணர்கள் இருவரை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கைதடி – கோப்பாய் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் அந்தணர் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடமிருந்தும் தலா 850 மில்லிக்கிராம் எடைகொண்ட கஞ்சா சரை இரண்டு கைப்பற்றப்பட்டன.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் தென்மராட்சியிலிருந்து வீடு திரும்பும் போதே கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர். சான்றுப் பொருள் சரைகளும் மன்றில் பாரப்படுத்தப்பட்டன.
வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM