விகாரைக்கு அருகில் இடம்பெற்ற படுகொலை : 4 பேர் சிக்கினர் 

Published By: R. Kalaichelvan

18 Sep, 2018 | 05:04 PM
image

(ஆர்.விதுஷா ) 

மஹரகம பகுதியின்  ருவாவெல புரான விகாரைக்கு அருகாமையில்  கூரிய ஆயுதத்தால் தாக்கி  நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான சம்பவத்தின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலையினை திட்மிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , அவர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கடந்த 7 ஆம் திகதி  குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது. கொலையினை திட்டமிட்ட இருவரை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதற்கு அமைவாக சந்தேக நபர்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்மடுல்ல பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபர்கள் நால்வரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் கடவத்த மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் 24 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

மிரிஹான விசேட குற்ற தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44