சங்கக்கார, ஜயவர்தன ஆகியோ ரின் ஓய்வையே எப்போதும் தோல்விக்கு காரணம் காட்ட முடியாது என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டில்ஷான் கூறியுள்ளார். இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கியுள்ளது. இதற்காக இலங்கை அணி இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.
இந்நிலையில் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடர் குறித்து இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் கூறுகையில், ”எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் உள்ளனர்.
சமீபத்திய தொடர்களால் இருந்து அவர்கள் அதிக அனுபவம் பெற்றிருப்பார்கள். முன்னாள் வீரர்களான சங்கக்கார, ஜயவர்தன ஆகியோர் அணியில் இல்லை என்று எப்போதும் நாம் காரணம் காட்ட முடியாது.
அனுபவ வீரர்களான சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் நாங்கள் அணியை சிறப்பான நிலைக்கு கொண்டுவந்தோம். எனவே ஓய்வு பெற்ற வர்களை பற்றி பேசி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இளம் இலங்கை அணி தயாராக உள்ளது. அவர்கள் முழு பங்களிப்பையும் விரைவில் அணிக்கு அளிப்பார்கள் என்றும் நம்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM