பேரினவாத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்க செய்யும் செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார்.
52 இலட்சம் ரூபா நிதியயொதுக்கீட்டின் கீழ் திருக்கோவில், விநாயகபுரம் மின்னொளி மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் கேள்வி கேட்கின்ற நிலைமையை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்பதனை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
நாட்டில் உள்ள பேரினவாத கட்சிகள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக குரல் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்க செய்யும் செயற்பாடாகும்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்க போராடும் அதேவேளை, அபிவிருத்தியையும் செய்து கொண்டு எதிர்ப்பு அரசியலலை விட்டு சாணக்கிய அரசியலலை செய்து வருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM