புத்தளம் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது குறித்த யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - கியுள பிரதேசத்தில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும், ஊர்காவற்படை ஊழியர்களும் காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது, யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், ஊர் காவற்படை ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டியடிக்க முற்பட்ட போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புத்தளம் - கருவளகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான தென்னகோன் முதியான்சலாகே நிமல் ரஞ்சித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்தோடு யானைத் தாக்கி படுகாயமடைந்த ஊர் காவற்படை ஊழியர் சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM