2 மாதத்திற்குள் கடனை செலுத்த வேண்டும் ; மின்சார சபைக்கு உத்தரவு

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 07:53 PM
image

இலங்கை மின்சார சபை வழங்க வேண்டியுள்ள கடனை இரண்டு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நிதி செலுத்தாத விவகாரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் உற்பத்தி, மின் விநியோகம் என்பவற்றுக்காக வருடாந்தம் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு நிதி செலுத்த வேண்டும்.

ஆனால், மின்சார சபை கடந்த 2018ஆ ம் ஆண்டு, 19 கோடியே 20 இலட்சத்து 600 ரூபாய் வரிப்பணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறியே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த கடன் தொகையை இரண்டு மாத காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டுமென நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51