மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஜேர்மனி நாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய இரு சிறுவர்களை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு முகத்துவாரம் சவுக்கடி கடற்கரை பிரதேசத்தில் ஜேர்மனியைச் சேர்ந்த உல்லாச பிரயாணிகளின் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம், மூக்குகண்ணாடி, கைபை என்பவற்றை திருடிய 13,10 வயதுடைய சிறுவர்களை இன்று காலை கைது செய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்
உயர்கல்வி பயின்றுவரும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர் விடுமுறையை கழிப்பதற்காக மட்டக்களப்பிற்கு சென்ற நிலையில் இன்று பகல் முகத்துவாரம் சவுக்கடி கடற்கரை இருந்த போது அவர்களின் பையில் இருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகள் 3 ஆயிரத்து 745 ரூபா பணம், மூக்கு கண்ணாடி, கைப்பை. என்பன திருடப்பட்டிருந்தது
இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.டி. தீகவத்துருவவின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு இன்று திங்கட்கிமை காலை முகத்துவாரத்தைச் சேர்ந்த 13, 10 வயதுடைய சிறுவர்கள் இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட கையடக்க தொலைபேசி பணம் மற்றும் பொருட்களை மீட்டனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM