கிளிநொச்சி பகுதியிலிருந்து சூட்சுமமான முறையில் பொலனறுவைக்கு எடுத்து செல்லப்படவிருந்த 4 கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது
இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது மெத்தை ஏற்றிய வாகனமொன்றில் மெத்தைக்குள் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல தயாராக இருந்தபோதே பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி அரச புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனையிட்ட கிளிநொச்சி பொலிஸார் குறித்த கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக தரித்து நின்ற முச்சக்கரவண்டியை சோதனை செய்த பொலிஸார் அதிலிருந்தும் கஞ்சா பொதி மீட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இதன்போது குறித்த இரு வாகனங்களை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.
விசுவமடு பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் குறித்த கஞ்சா பொதி எடுத்து வரப்பட்டு, குறித்த பகுதியில் மெத்தை ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்து பொலனறுவை பகுதிக்கு எடுத்த செல்ல தயாராக இருந்தபோதே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மற்றய இருவரில் ஒருவர் குருணாகல் பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றயவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM