தலைமன்னார் பியரிலிருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப் பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்று ஞாயிற்றுக் கிழமை (16.09.2018) பிற்பகல் 6 மணியளவில் தலைமன்னார் பியரைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந் (வயது 30) மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர் வழமைபோன்று வெளிகள இயந்திர படகு ஒன்றில் தனிமையாக மீன் பிடிக்காகச் சென்றுள்ளார்.
இன்று திங்கட்கிழமை (17.09.2018) காலை அப் பகுதிக்கு மீன் பிடிக்காகச் சென்றவர்கள் கடலில் படகு ஒன்று வலைகள் கடலில் இடப்பட்ட நிலையில் இருப்பதை அவதானித்ததையடுத்தே படகில் மீன் பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை என்ற சம்பவம் தெரிய வந்துள்ளது.
இது விடயமாக தலைமன்னார் பொலிசார் மற்றும் தலைமன்னார் கடற்படையினருக்கு தெரியப் படுத்தியதைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் தலைமன்னார் கடற்படையினரும் அப் பகுதி மீனவ சமூகமும் காணாமல்போன மீனவரை தேடி வருகின்றனர்.
மீனவர் தலைமன்னார் பியர் கடற்கரையிலிருந்து தலைமன்னார் மேற்கு கடலை நோக்கி சுமார் பத்து கடல் மைல் தூரத்திலேயே மீன்பிடியின்போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM