திருமண நிகழ்வில் ஏற்பட்ட கைகலப்பு இறுதியில் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தந்தை அந்தோணிமுத்து அவருடைய மகன் அமல்ராஜ் ஆகியோரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் அன்றைய தினம் நள்ளிரவு தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியவருக்கும் அவருடைய மகனுக்கும் கத்தியால் குத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM