தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள் என இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினோம். எனவும் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் இன்று நடைபெற்றது.
இலங்கை கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 10.00 மணிக்கு இதயக்கனி நாளிதழின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாடு செய்த எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றது.
கண்காட்சியை இந்திய தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இலங்கையின் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோரும் தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் இன்று நடைபெறுகின்றது.
இதில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு நல்ல வாய்ப்பு ஒன்றை இலங்கை கல்வித்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஏற்படுத்தி தந்துள்ளார். இதனால் இவருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றொம்.
இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் நூல்கள் வழங்கப்படவுள்ளன.
அவர் பிறந்த ஊரில் நாங்கள் காலடி எடுத்து வைத்தது எங்களுக்கு பெருமையாகவுள்ளது என இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மேலும் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவ பிரச்சனையை பொருத்தவரையில் இன்னும் ஓர் இரு மாதங்களில்; இலங்கை இந்திய மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.
இன்று காலை எமது மீன்வளத்துறை அமைச்சரை நானும், தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்தோம். இதன்போது எமது இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை செல்வதாக தெரிவித்தார்.
சென்னையில் உள்ள மக்களோடு சந்தித்த பிறகு டெல்லி அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து இதற்கு தீர்வு காண பேச்சுவார்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM