எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடுபூராக ஒரே தினத்தில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக கடற்தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மாரவில பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பேசிய அகில இலங்கை கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் சுஜித் சமந்த கூறியதாவது.
இன்றைய கால எரிபொருள் விலை உயர்வால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 44% ஆக இருந்த ஆழ்கடல் மீன்பிடி வருமானம் இன்று பூச்சியத்தைத் தொட்டுள்ளது. இது தொடர்பில் ஆட்சியாளர்களை சந்தித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சிறு சிறு போராட்டங்களை மேற்கொண்டும் எப்பலனுமற்றுப் போனது.
மீன்பிடித்துறை அமைச்சரோ நிதி அமைச்சர் பக்கம் விரலை நீட்டுகிறார்.
இதில் இன்னும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால். 02 மாத காலமாக மீன்பிடித்துறை அமைச்சர் மக்கள் சந்திப்பை மேற்கொள்ளவில்லை.இப்படியிருந்தால் எவ்வாறு எம் பிரச்சினைகளிற்கு தீர்வு காண்பது.
இத்தகைய அசமந்தப்போக்கை தடுத்து, எம் மீனவர்களின் நலனிற்காக வெகு விரைவிலேயே ஒரே நாளில் நாடுபூராக ஆர்பாட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM