"நீதிமன்றம் விடுவித்தபோதும் சிறை அதிகாரிகள் கணவரை விடுதலை செய்யவில்லை"

Published By: Digital Desk 4

16 Sep, 2018 | 11:13 AM
image

கனகராயன்குளம் உணவக காணி உரிமையாளர் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை விடுதலை செய்யவில்லையென அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளம் உணவக உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்று முந்தினம் நீதிமன்றத்தினால் மூன்று பேரின் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் சிறைச்சாலை அதிகாரிகள் தனது கணவரை விடுதலை செய்யவில்லை என குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தாக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், 

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலம் முறைப்பாட்டு பிரிவுக்கு எனது கணவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து அதற்கான ரசீத்தையும் வழங்கியுள்ளது 

என முறையிட்டபோதும் நீதிமன்றத்தின் உத்தரவானது நேரடியாக பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை அதன்காரணமாக குறித்த நபரை விடுதலை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்சிழமையே எனது கணவரை விடுதலை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளியின் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற 'தாவுத்' என்பவருக்கு ஆதரவாக செயற்பட்ட கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெ. வசந்தகுமாரின் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58