அமெரிக்கா - புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
புளோரன்ஸ் புயல் மற்றும் அதனால் உண்டான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புளோரன்ஸ் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி வடக்கு கரோலினாவின் டப்பிளன் கவுண்டியில் மூன்று பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் வடக்கு கரோலினாவில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அத்துடன் தெற்கு கரோலினாவில் புயலில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புயல் தாக்கிய வடக்கு கரோலினாவில் பல்லாயிரம் பேர் அவசர உதவி மையங்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 17 இலட்சம் பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 8 இலட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.
அத்துடன் மீட்பு படையினரும், கடற்படையினரும் தொடர்ந்தும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM