காஸாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11 சிறுவன் உட்பட மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காஸா எல்லையில் 15000 பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்ததாகவும் அதிலிருந்து புகைகள் வெளியாவதை பயன்படுத்தி படையினர் மீது கற்களையும் கைக்குண்டுகளையும் வீசியதாகவும் இதில் இஸ்ரேலிய படையினர் சிலர் காயமடைந்தனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை 11 வயது சாடி அப்டெல் அல் உட்பட மூவர் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன வைத்திய தரப்புகள் தெரிவித்துள்ளன.
எனது மகன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏனைய ஆயிரக்கணக்கானவர்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வது வழமை இன்றைய வெள்ளிக்கிழமை அவன் மாவீரர் ஆகவேண்டும் என்ற விதி இருந்திருக்கின்றது என சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
காஸா எல்லையிலிருந்து 70 மீற்றர் தொலைவில் சிறுவன் சுடப்பட்டதை பார்த்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM