ஒடிசாவில் மத நம்பிக்கை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி ஒருவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ மூட்டியதில் குறித்த நபர் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் கந்தமால் என்ற பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் 30 வயதான பாபனி ஷங்கர் நந்தா என்ற மாற்றுத்திறனாளியை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டினால் அவர் குணமடைந்து விடுவார் என குறித்த நபரின் தாயாரிடம் கூறப்பட்டுள்ளது.
இதை நம்பிய பாபனியின் தாய் தனது மகனின் உடலில் உள்ள குறைப்பாடுகளை தீர்ப்பதற்காக பலிகுடா என்னும் கிராமத்திலுள்ள கோவிலுக்கு குறித்த சடங்கை செய்ய பாபனியை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வலுக்கட்டாயமாக பாபனியை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ மூட்டியுள்ளனர்.
இதனால் பாபனிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட கோவிலுக்குள் வைத்து பாபனிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சடங்கை செய்த பூசாரி விடயம் வெளியில் தெரிந்தால் தனக்கு ஆபத்து எனக் கருதி வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்குமாறும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் தாய்க்கு கூறியுள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல பாபனியின் உடல் நிலை மோசமடைய பெற்றோர் பாபனியை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெற்றோர் பூசாரிக்கெதிராக பலிகுடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பலிகுடா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பூசாரியையும் அவரது உதவியாளரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM