(இராஜதுரை ஹஷான்)
தவறான புரிதலை மீள் திருத்தும் வகையில் டெல்லி சந்திப்புகள் அமைந்தன. அது மாத்திரம் அல்லாத இலங்கை - இந்திய உறவினை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்திய விஜயம் அமைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பிற்கு அமைவாக மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் டெல்லி சென்றிருந்தனர்.
விஜயம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் மிக சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறித்த விஜயத்தின் ஊடாக பல புதிய மாற்றங்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இந்திய விஜயத்தை நிறைவு செய்து வெற்றியுடன் நாடு திரும்பியதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM