தொடரும் வறட்சியான காலநிலையுடன் குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக உடலில் நீர்சத்து குறையும் அபாயம் உள்ளதால் சிறுவர் முதல் பெரியவர் வரை இயலுமானரை நீர் ஆகாரங்களை உட்கொள்ளுமாறும் தொழில் புரியும் இடங்களிலும் நிழல் தரும் இடங்களில் இழைப்பாறிக் கொள்ளுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் அதிகரிக்கும் வெப்பநிலையின் காரணமாக சரும நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சருமத்தில் மாற்றங்கள் ஏதேனும் தென்படின் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வறட்சியால் 17 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் புத்தளம் பொலன்னஞவை அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நீர் தாங்கிகள் மூலம் சுத்தமான குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM