(ஆர்.விதுஷா)
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஹெரோயின் கடத்தல் சம்பவங்கள் நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
மேற்படி ஹெரோயின் கடத்தலில் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பல கோணங்களில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதுடன் 20 இற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்ட வயதை உடைய இளைஞர்களே மேற்படி ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து எம்பிலிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரிடமிருந்து 10 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , பனாமுர பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 23 வயதுடைய இரத்தினபுரி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , வடறெக பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரிடமிருந்து 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM