பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவும் நேற்றிரவு நாடு வந்து சேர்ந்துள்ளனர்.
மூன்று நாட்க்கள் விஜயம் மேற்கொண்டு கடந்த 10 ஆம் திகதி வியட்நாமுக்கு பயணித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வியட்நாமின், ஹனோய் நகரில் இடம்பெற்ற ஆசிய சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி அவர் நேற்றிரவு சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.407என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.15 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதேவேளை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று கடந்த 10 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மமேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ,
இந்தியாவின், டெல்லியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங் மற்றம் ராகுல் காந்தி ஆகியோரையும் கந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லியிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் -196 என்ற விமானத்தினூடாக நேற்றிரவு 10.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM