வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் உள்ள வீடொன்று நேற்று பகல் 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த வீட்டில் தாய், தந்தை உட்பட மூவர் வசித்து வந்தபோதும், இவர்கள் எவரும் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து அயலவர்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் வீட்டிலிருந்து உடமைகள், உடமைகள் மற்றும் மற்றும் மாணவர்களின் பாடசாலை உபகரணங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் இவர்களின் நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
அத்துடன் அப் பகுதியில் உள்ள சமூக அமைப்பினரால் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM