மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச சுகாதார சேவைகள் சங்கத்தின் செயலாளர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டித்தே நாளை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டாக்டர் திருமதி கலாரஞ்சனி நியமிக்கப்பட்டு பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்தும் தற்போதைய பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனியே பணிப்பாளராக அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் நாளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 12 மணி வரை வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதென தீர்மானித்துள்ளதாகவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM