(எம்.மனோசித்ரா)
முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்படுமாயின் அதனைப்பற்றி அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ் விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என சந்தேகிக்கும் பட்சத்தில் உரிய தரப்பினர் தம்மிடம் கோரப்படும் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் முறையாக பெற்றுக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். அவ் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் தெரிவு செய்யப்படாத மாணவர்களின் பெற்றோர் மேன்முறையீடு செய்யலாம்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மாணவனொருவன் ஏதேனுமொரு பாடசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இது உறுதிசெய்யப்படுமாக இருந்தால், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த மாணவனை பாடசாலையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM