ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கு அந்த சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவேளை அந்த பகுதியில பணியாற்றிய அனுசியா டெய்சி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிர் தப்பினார்.
இந்நிலையில் அவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என கருத்து வெளியிட்டுள்ளார்.
1991 மே 21 ஆம் திகதி எனது வாழ்நாளில் கறுப்பு நாள் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புத்தூர் வந்திருந்தார், என தெரிவித்துள்ள அவர் கூட்டத்திலிருந்த பெண்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை என்னிடம் ஓப்படைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நானும் வேறு 10 பெண் காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தோம் நான் ராஜீவ்காந்திக்கு அருகில் நின்றிருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நான் தடுமாறி விழப்போனேன் அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து பதட்டப்படாதீர்கள் எனவும் தெரிவித்தார் என அனுசியா குறிப்பிட்டுள்ளார்
சிறுமியொருவர் ராஜீவ்காந்தியிடம் எதனையோ தெரிவித்துக்கொண்டிருந்தார் ராஜீவ்காந்தி அதனை செவிமடுத்துக்கொண்டிருந்தார் தீடீரென பயங்கர சத்தம் கேட்டது எனது உடலை ஏதோ துளைத்துக்கொண்டு சென்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேகத்தில் நான் தூக்கியெறிப்பட்டேன், எனது உடலின் இடது புறம் முற்றாக சிதைவடைந்தது, எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான் எனது கைவிரல்கள் மூன்றை இழந்தேன்,முடிகள் அனைத்தும் கருகிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு சிதறல்கள் என்னை துளைத்திருந்தன யாரோ என்னை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மூன்று மாதங்கள் வரை நான் சிகிச்சை பெற்றேன் எனினும் பின்னர் நான் மீண்டும் காவல்துறைக்கு திரும்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நளினி உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு துடிப்பதையும் அரசியல் கட்சிகள் போராடுவதையும் பார்க்கும்போது நெஞ்சு கொதிக்கின்றது எனவும் அனுசியா டெய்சி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM