ஈரானானது இரு புதிய ஏவுகணைகளை புதன்கிழமை ஏவியதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
அமெரிக்காவிடமிருந்து புதிதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மத்தியில் நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமையைக் கொண்ட காடர்-–எச் மற்றும் காடர்- –எப் ஆகிய ஏவுகணைகளை ஈரான் ஏவிப் பரிசோதித்துள் ளது.
வட ஈரானிலிருந்து தென் கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலக்குகளை சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் ஏவிப் பரிசோதிக்கப்பட்டன.
மேற்படி ஏவுகணைகளானது 1400 மைலுக்கும் அதிகமான தூரம் பயணித்து உரிய இலக்கைச் சென்று தாக்கக் கூடியவையாகும். இதையொத்த ஏவுகணைகளை ஏவும் பரிசோதனை நடவடிக்கைகள் முதல்நாள் செவ்வாய்க்கிழமையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஏவுகணைப் பரிசோதனை குறித்து அந்நாட்டு புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த பிரதித் தலைவர் ஜெனரல் ஹொஸைன் சலாமி தெரிவிக்கையில், “ஈரானின் ஏவுகணைப் பரிசோதனைகளானது அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஆதரவையும் அதிகாரத்தையும் பெற்றுத் தரும் என்று கூறினார்.
தமது நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு எந்நேரத்திலும் பதிலடி கொடுக்கத் தயாராக பெருமளவு ஏவுகணைகளின் கையிருப்பு தம்மிடமுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு முன்னர் ஈரான் மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனைகளுக்காக அந் நாட்டின் மீது அமெரிக்கா ஒரு தொகை தடைகளை கடந்த ஜனவரி மாதம் விதித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM