வடமாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு எதிர்கூரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது என அவைத் தவைர் சீ,வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
வடமாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.
அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23 ஆம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம்.
மேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது.
அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என்றார்
வடமாகாணசபையின் 131 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM