15 - 19 வயதிற்கிடைப்பட்ட பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு

Published By: R. Kalaichelvan

11 Sep, 2018 | 02:47 PM
image

இலங்கையில் 15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில்,  கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாக பொரளை - காசல் வீதி, மகளிர் மருத்துவமனையின் விசேட நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நாளொன்றுக்கு  சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்ந்துவரும் நிலையில், கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியிலேயே  கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 

பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைகளுக்குரிய விடயமாகும். 

இதற்காக அரசாங்கத்திற்கு,  கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார். 

 குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் வைத்தியர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், 

குடும்பத்திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களைத்  தவிர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் சனத்தொகையும் வெகு சீக்கிரமாக அதிகரிப்பதால்,  குடும்பக் கட்டுப்பாடு குறித்தும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் வைத்தியர் கீதாஞ்சலி மாபிட்டிகம சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09