எண்ணெய்க் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உணவுக்கு எடுத்து கொள்வதில் எவ்வித சுகாதார பாதிப்புகளும் ஏற்படாது என சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கப்பலிலிருந்து அவற்றை இறக்கும் சந்தர்ப்பத்திலேயே குழாயில் கசிவு ஏற்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக குழயிலிருந்து வெளியேறிய எண்ணெய் கடலில கலந்தமையினால் உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற்பிராந்தியங்களில் பாதிப்படைந்திருந்தது.
இதனால் கடலில் கலந்த எண்ணெயை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் 58 இராணுவ வீரர்களும் 300 கடற்படை வீரர்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை குழாயில் கசிவு ஏற்பட்டமை மற்றும் அதனால் கடல்மார்க்கம் மாசடைந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாரா நிறுவனம், இது தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த எண்ணெய்க் கசிவு காரணமாக தற்போது இக்கடுவை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் எண்ணெய் கலந்துள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM