(இரோஷா வேலு)
காலி - ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் பாதையில் சென்றுக்கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவிக்கின்றது.
சம்பவத்தில் காயமடைந்த தலாதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவர் காராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாம் மர வீதி தலாதுடுவ கொங்கல பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரொருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவருக்குமிடையில் காணப்பட்ட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே மேற்படி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் அபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM