இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டித் தொடரின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று 154 ஓட்ட வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதன் பின்னர் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் விஹாரி 25 ஓட்டத்துடனும், ஜடேஜா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிளக்காதிருந்தனர்.
எனினும் நேற்யை தினம் ஆரம்பமான போட்டியின் மூன்றம் நாள் ஆட்டத்தின் போது இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
அறிமுகப் போட்டியிலேயே ஹனுமா விஹாரி 104 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாசி 56 ஓட்டங்களில் மெயினுடைய பந்து வீச்சி பிரிஸ்டோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து வந்த இஷாந்த் ஷர்மா 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அதன் பின் வந்த ஷமியும் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். தொடர்ந்தும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தார்.
இருப்பினும் ஜடேஜாவுக்கு பக்கபலமாக தோல்கொடுத்தாட எவரும் இல்லாத காரணத்தினால் 95 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணி 292 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை விட முன்னிலையிலிருந்தது.
இந்திய அணி சார்பாக ஜடேஜா 86 ஓட்டங்களையும், விஹாரி 56 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 49 ஓட்டங்களையும், ராகுல் மற்றும் புஜாரா தலா 37 ஒட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக அண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் புரோட், குர்ரன் மற்றும் ரஷித் ஆகியோர் தல ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, நேற்றைய மூன்றாம் நாளின் போது தனது இரண்டாவது இன்னிங்ஸை எதிர்கொள்ள ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினர்.
இதன்படி இங்கிலாந்து அணி 27 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது ஜென்னிங்ஸ் 10 ஓட்டங்களுடன் ஷமியின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து குக் உடன் கைகோர்த்த மொயின் அலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருந்தபோது ஜடேஜாவின் சுழலில் சிக்கிய மொயின் அலி 20 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் குக் உடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ரூட் அதிரடி ஆட்டத்தை காண்பிக்க இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை உயர்வடைந்தது. மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் 52 ஓட்டங்களை குவித்தனர்.
இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர இங்கிலாந்து அணி 43 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 114 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
குக் 46 ஓட்டங்களுடனும் ரூட் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 154 ஒட்ட வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM