அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் பதவியேற்பின் போது மக்கள் அதிகளவில் திரண்டுள்ளது போன்று வெளியான புகைப்படம் பொய்யனாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக வெளியான படம் போலியாக சித்தரிக்கப்பட்ட படம் எனும் உண்மை வெளியாகியுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு வந்த மக்கள் கூட்டம் தான் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்து அப்போதே சமூக வளைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவியேற்பு கூட்டத்திற்கு கூடிய மக்களை விட டிரம்பின் பதவியேற்பு விழாவிற்கு வந்த கூட்டம் மிகவும் குறைவு என ஆதாரங்களுடன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டனர்.
இதற்கு பதிலளித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் பதவியேற்பு விழாவில் அதிகளவில் மக்கள் பங்கேற்றதாக அரசு தரப்பில் வெளியான படம் போலியாக வடிமைக்கப்பட்ட படம் எனும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த ஆவணத்தில், தனது பதவியேற்பு விழாவில் போதிய கூட்டம் கூடாத காரணத்தால் டிம்ரப் அதிருப்தி அடைந்தார், பின்னர் அதிக கூட்டம் திரண்டது போன்று வடிவமைக்க செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியதால் உண்மை படத்தில் இருந்த வெற்று இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் இருப்பது போல் வடிமைக்கபட்டதாக தெரிவிக்கின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM