ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.
இதுவரையில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித் தொடர்களில் இலங்கை 5 முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
1985 ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் தொடரை மலேஷியா வென்றது.
அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது தொடரை இலங்கை அணி வென்றது. அதன்பிறகு 1997 ஆம் ஆண்டு, 2001 ஆம் ஆண்டு, 2009 ஆம் ஆண்டு என 4 முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் நடைபெற்று வரும் இப்போட்டியில் நடப்பு சம்பியனான மலேஷியா, உப சம்பியனான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவு, சீனா, ஜப்பான், ஹொங்கொங், சைனீஸ் தாய்ப்பே, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகியவற்றுடன் போட்டி ஏற்பாடு நாடான சிங்கப்பூர் ஆகிய 12 நாடுகள் பங்கேற்றன.
தலாமூன்று அணிகள் ஏ,பீ,சி,டி என நான்கு குழுக்களாக நடைபெற்ற லீக் சுற்றில் தத்தமது குழுக்களில் முதலிடம் பெறும் 4 அணிகள் சம்பியன்ஷிப் கிண்ணத்துக்கான பிரிவிக்கு முன்னேறியது.
இதன்படி குழு ஏயில் மலேஷியாவும், குழு பீயில் இலங்கையும், குழு சியில் சிங்கப்பூரும், குழு டியில் ஹொங்கொங்கும் தத்தமது குழுக்களில் முதலிடம் பிடித்து சம்பியன்ஷிப்புக்கான பிரிவில் இடம்பெற்றன.
தனது முதல் சுற்றில் விளையாடிய இலங்கை இந்தியாவை 101 – 29 என்ற கோல்கள் கணக்கிலும், சைனீஸ் தாய்ப்பேயை 137 – 5 என்ற கோல்கள் கணக்கிலும் அபார வெற்றியை ஈட்டியது.
இதேவேளை, தத்தமது குழுக்களில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் 5 முதல் 8 வரையான இடங்களுக்கான போட்டிப் பிரிவிலும், மூன்றாம் இடம் பெறும் அணிகள் 9 முதல் 12 வரையான இடங்களுக்கான பிரிவிலும் போட்டியிட்டன.
சம்பியன்ஷிப்பின் பிரதான போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி ஹொங்கொங்கை 71 – 48 என்ற கோல்கள் கணக்கிலும், சிங்கப்பூரை 74 – 61 என்ற கோல்கள் கணக்கிலும், நடப்புச் சம்பியனான மலேஷியாவை 62 – 59 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிலும் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்றைய தினம் ஹொங்கொங் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் பெரும் சவாலை அளித்த ஹொங்கொங் அணியை 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தோல்வியடையாத அணியாக இலங்கை இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இதன் முதல் கால்மணியில் 14 – 13 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பின்னிலையிலிருந்தபோதும், அடுத்த மூன்று கால் மணிகளிலும் முறையே 15 – 10, 12 – 10, 15 – 12 என கோல்களை போட்டு மொத்தமாக 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டின.
இரண்டாவது அரையிறுதியில் மலேஷியாவுடனான போட்டியில் -51 – 43 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
அதன்படி இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி சிங்கப்பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமானது.
இதில் இலங்கை அணி 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM