பாகிஸ்தானின் 13 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைத்தியர் ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்கவுள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நிறைவடைவதால் அந்த பதவிக்கு சமீபத்தில் தேர்தல் இடம் பெற்றது. இதில், ஆளுங்கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் போட்டியிட்ட பல் வைத்தியர் 69 வயதான ஆரிப் ஆல்வி வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் பதிவான 430 வாக்குகளில் வைத்தியர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும் பெற்றனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகள் பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கான நடைமுறைகள் தொடங்கின.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் 13 வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி நாளை பதவியேற்க உள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமார் ஜாவீத் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தற்போதைய ஜனாதிபதி மம்னூன் உசேனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிரிவுபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த மம்னூன் உசேன், தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த திருப்தியுடன் விடைபெறுவதாக கூறினார். தனது பதவிக்காலத்தில் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM