சாவகச்சேரி நகரசபையின் உபதலைவர் அ.பாலமயூரன் மற்றும் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீசாலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணி அலுவலகம் அமைந்துள்ள காணியில் நகராட்சி மன்றம் அனுமதியின்றி சட்ட விரோதமாக மதில் அமைக்க முற்பட்டுள்ளனர்.
இன்று விடுமுறை தினமாகையால் இது தொடர்பாக பொதுமக்கள் உப தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.
உடனடியாக உபதவிசாளர் உரிய அதிகாரிகளுடன் சட்டவிரோத மதில் அமைக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்துக்கு விரைந்துள்ளார்.
அங்கு மதில் அமைக்க முற்பட்டவர்களிடம் சட்டவிரோதமாக மதில் அமைக்க வேண்டாம் என்றும் நகராட்சி மன்றின் கட்டட அமைப்பதற்கான உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்குமாறும் அதுவரை மதில் அமைப்புப்பணிகளை நிறுத்தி வைக்குமாறும் நகராட்சி மன்ற அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத மதில் அமைப்பில் ஈடுபட்டவர்கள் நாங்கள் மதிலை இப்பொழுதே கட்டுவோம் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என தகராறில் ஈடுபட்டு தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது நிலைமையின் விபரீதத்தினை உணர்ந்த உபதவிசாளர் உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தி நகராட்சி மன்றின் நடைமுறைகளை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக உபதலைவர் பாலமயூரனின் உத்தரவின் படி நகராட்சி மன்ற அதிகாரிகளால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM