டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொணிங்டன் தோட்டத்தில் நான்கு வீடுகளின் முன்பகுதி சுவர்கள் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் 2, ஆண்கள் 7, பெண்கள் 10 பேர் உள்ளடங்குகின்றனர்.
டயகம பிரதேசத்திலிருந்து தலவாகலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆக்ரா ஆற்றுக்கு அருகாமையில் 1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு வீடுகளை கொண்ட தொடர் வீடுகளிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன் பாரிய வெடி சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே குறித்த வீடுகளின் முன் பகுதி சுவர்கள் திடீரென சரிந்து வீழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக டயகமை பொலிஸார் மற்றும் நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காரணம் கண்டறியப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மொணிங்டன் தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM