(எம்.மனோசித்ரா)
போலி மாணிக்கக்கற்களை காண்பித்து தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த மூன்று சந்தேக நபர்களை கைக்குண்டுகளுடன் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.சம்பவமானது களுத்துறை - மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மத்துகம பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் குறித்த சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் போலியான மாணிக்கக்கற்களை காண்பித்து நாட்டின் பல பகுதிகளிலும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடமிருந்து கைக் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 போலி மாணிக்கக்கற்கள் மற்றும் தங்கமுழாம் பூசப்பட்ட 2 மாலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35, 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும், பதுளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM