(பங்களாதேஷிலிருந்து நெவில் அன்தனி)பங்களாதேஷின் டாக்கா பங்பந்து விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன கிண்ண "பி" குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை, இன்றைய தினம் இரவு மாலைதீவு அணியை சந்திக்கவுள்ளது.இந்தியாவிடம் கடந்த புதன்கிழமை 2–0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை, அரையிறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை சொற்ப அளவேனும் பெறுவதற்கு மாலைதீவு அணியை வெற்றிகொண்டே ஆகவேண்டிய நிலையிலிருக்கின்றது.
இதன் காரணமாக இன்றைய போட்டியை இலங்கை அணி பலத்த நெருக்கடிக்கு மத்தியில் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் மாலைதீவுக்கும் இலங்கைக்குமி டையில் 1991 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள 12 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் 7 இல் மாலைதீவு வெற்றிபெற்றதுடன் 4 போட்டிகள் வெற்றி – தோல்வியின்றி முடிவடைந்தன.
ஒரே ஒரு போட்டியில் பெனல்டி அடிப்படையில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது. அதாவது முழுமையான ஆட்ட நேரத்தில் இன்று வரை மாலைதீவு அணியை இலங்கை வெற்றிகொண்டதில்லை.
மாலைதீவில் 2006 இல் நடைபெற்ற பொன்விழா கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதியாட்டத்தில் மாலைதீவும் இலங்கையும் மோதின. அப் போட்டி முழு நேரத்தின்போது 1–1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி – தோல்வியின்றி முடிவடைந்தது.
இதனையடுத்து பெனல்டி முறையில் இலங்கை வெற்றிபெற்று சம்பியனானது.
எனவே மாலைதீவுக்கும் இலங்கைக்குமிடையிலான நேருக்கு நேர் போட்டிகளின் அடிப்படையில் இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெறுவதாக இருந்தால் கடும் பிரயாசையுடன் விளையாட வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM