இந்தியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இந்தியா புறப்பட்டது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான அணியினரை வழியனுப்பும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
6ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று ஆரம்பமானது. தகுதிகான் சுற்றுக்கள் முடிந்தவுடன் எதிர்வரும் 15ஆம் திகதி சுப்பர் 10 சுற்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் இலங்கை அணி நேற்று இந்தியாவிற்கு புறப்பட்டது.
இலங்கை அணியை வாழ்த்தியனுப்புவதற்காக கொழும்பு குதிரைத் திடல் மைதானத்தில் நேற்று விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். அத்தோடு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேரக, இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹாரிஸ் மற்றும் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஒரு அணி ஒரு தேசம் என்ற விசேட வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், எமக்கு தெம்பூட்டி வழியனுப்பிவைக்க அனைவரும் கூடியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
அதன்பிறகு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான அணி வீரர்கள் ஒவ்வொரு வருக்கும் கைலாகு கொடுத்து வாழ்த்தியனுப்பிவைத்தார் ஜனாதிபதி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM