(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
"மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் எனக்கும் அவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மஹேந்திரனுடன் தொடர்புகளை கையாள வேண்டாம் என எனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது அதற்கமைய நான் தொடர்புகொள்ளவில்லை, எனினும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைக்கவும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றது" என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக,
பாரிய இலஞ்ச ஊழல் குறித்த குற்றங்களில் விசாரணைகளை முன்னேடுக்கும் நகர்வுகள் எந்த மட்டத்தில் உள்ளது?
இவற்றை விசாரிக்க உருவாக்கிய விசேட மேல் நீதிமன்ற விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளது?
எத்தனை விசாரணைகள் விசாரிக்கப்பட்டுள்ளது?
மத்தியவங்கி ஊழல் குறித்த நிகழ்கால தன்மைகள் எந்த மட்டத்தில் உள்ளது?
விசேட நீதிமன்றத்தில் இவை விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய வேளையில் அதற்கு பதில் கூறுகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM