கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில், பாதுகாப்பு படையினர் சிலர் சிவில் உடையில் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மஹிந்த,
"வன்முறைகளை தூண்டவே பாதுகாப்பு படையினர் இச் சதித் திட்டங்களில் ஈடுபட உள்ளனர். ஆனால் நாம் எந்த வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம்.
இலட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட உள்ளமையால் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே வன்முறைகளை தூண்டி ஆர்ப்பாட்டத்தை குழப்ப முயற்சி செய்கின்றனர்" என தெரிவித்துள்ளார்
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் வினவிய போது,
"இது முற்றிலும் பொய்யான விடயமாகும். ஆர்ப்பாட்டத்தை குழப்பி வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட பாதுகாப்பு படையினருக்கு எவ்வித தேவையும் இல்லை. பொதுமக்களையும், அரச சொத்துக்களையும் பாதுகாப்பதே எமது கடமையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM