பாகிஸ்தான் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று இடம்பெற்ற வாக்குப்பதிவில் இம்ரான் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனின் ஐந்தாண்ட் பதவிக்காலம் இம்மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைவதால் குறித்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறறது.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பல் வைத்தியரான ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த 430 உறுப்பினர்கள் மற்றும் மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை நிறைவடைந்தது. பாராளுமன்றத்தில் பதிவான 430 வாக்குகளில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வேட்பாளரான வைத்தியர் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளை பெற்றார். மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும், ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகளையும் பெற்றனர்.
இதைதொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் 13 வது ஜனாதிபதியாக ஆசிப் ஆல்வி விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM