தமிழ் மக்களை பயங்கரவாதக் குழுக்களாக பார்க்கும் செயற்பாடு தொடர்ந்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கை மனவேதனை தருகிறது. எங்கள் மத்தியில் இராணுவம் இருந்து வீடுகளையும், காணிகளையும் வாழ்வாதாரத்தையும் பிடுங்குவது தொந்தரவாக உள்ளது.
அவர்கள் முன்பிலும் பார்க்க தற்போது தங்களுடைய முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும் தங்களுடைய தகவல் சேகரிக்கும் கடமைகளில் இப்போதும் ஈடுபட்டு வருகின்றார்கள். பயங்கரவாதிகள் என்ற மனோநிலையிலே தமிழ்மக்கள் அனைவருமே அவர்கள் பார்க்கின்றனர். தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் இவர்கள் செயல்புரிந்து வருவது மனதிற்கு வேதனை தருகிறது என்ற கருத்தை நாம் அவரிடம் முன்வைத்தோம்.
இதைவிட வேறு பல பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறினோம் இவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். மேலும் பாதுகாப்புக்கு தற்போது கூட வரவுசெலவுத்திட்டம் மூலம் பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் எங்களுக்கு நன்மை பயர்க்கக்கூடிய விதத்தில் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என எடுத்துக் கூறியதுடன் ஏனைய மாகாணங்களிலும் பாரக்க நாங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதால் எங்களுக்கு கூடிய நிதி தேவை என்பதை எடுத்துக்கூறினோம். இவ்வாறு பல விடயங்களையும் எடுத்து கூறியுள்ளோம்.
இத்தகைய பிரச்சினையை அவர் ஏற்றுக்கொண்டார். உங்களுடைய பிரச்சினையை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். நாங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்திற்கும் எல்லாவிதமான நன்மைகளையும் செய்வோம் என்று அவர் உத்தரவாதம் தந்தார் என்று முதலமைச்சர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM