ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி புலிக்கொடி மற்றும் வெடிப்பொருட்களுடன் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 09 பேரை முதற்கட்டமாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் துணுக்காய், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதோடு மேலும் ஒருவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ந.சுதர்சன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த 12 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM