துபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்

Published By: Robert

08 Mar, 2016 | 03:56 PM
image

துபாய் நாட்டுக்கு பணிபெண்ணாக சென்ற சாஞ்சிமலை தோட்ட பெண் மரணம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 36வயது மதிக்கதக்க பெண் ஒருவர் துபாய் நாட்டில் மரணமடைந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2013ம் ஆண்டு கொழும்பில் இயங்கும் முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த இரு வருட காலமாக தமது உறவினர்களோடும் கணவரோடும் எவ்வித தொடர்புகளும் பேணி இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 04ம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக காளிமுத்து சிகப்பி என்ற பெண் துபாய் நாட்டில் இறந்துள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

- எஸ்.சதீஸ்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46